நீடாமங்கலம்-தஞ்சை சாலையில் ரயில் பாதை பராமரிப்பு பணி
1/24/2022 12:48:19 AM
நீடாமங்கலம், ஜன.24: நீடாமங்கலம்-தஞ்சை சாலையில் ரயில் பாதை பராமரிப்பு பணி நடந்தது. நீடாமங்கலத்திலிருந்து தஞ்சை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மன்னார்குடி செல்லும் ரயில்வே பாதை உள்ளது. இதில் நாகை-மைசூர் மற்றும் மன்னார்குடியிலிருந்து தஞ்சை செல்லும் வாகனங்களும், திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் திருப்பதி விரைவு ரயிலும், தினந்தோறும் கோவை செம்மொழி விரைவு மற்றும் மன்னை-சென்னை விரைவு ரயிலும், சனி மற்றும் திங்கட்கிழமைகளில் பகத் கி கோதி ராஜஸ்தான் விரைவு ரயிலும் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த ரயில்வே பாதையில் நேற்று முன்தினம் இரவிலிருந்து பராமரிப்பு பணி தொடங்கி நேற்று பகல் முழுவதும் நடந்தது. இந்த வழியாக சென்று வந்த பஸ்கள் வேறு வழியில் மாற்றம் செய்யப்பட்டு திருப்பி விடப்பட்டது. பணி நடை பெறுவது தெரியாத ஆட்டோ, கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் அங்கு வந்தவர்கள் செல்லும் வழி தெரியாமல் அங்குள்ளவர்களை கேட்டு திரும்பி பல கி.மீ. வரை சுற்றி சென்றனர். அவர்கள் கூறுகையில், முன் கூட்டியே ரயில்வே துறை பராமரிப்பு பணி நடைபெறுவதாக ஊடகம் மற்றும் நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிட்டிருந்தால் வாகன ஓட்டிகள் அவதியுற்றிருக்க மாட்டார்கள் என அப்பகுதியில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
ஜெராக்ஸ்மிஷினை பழுதுநீக்கி தராத நிறுவனத்திற்கு ரூ.3லட்சம் அபராதம்: திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
ஒன்றிய அரசை கண்டித்து பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஊராட்சி செயலர்களுக்கு சம்பளம் வழங்ககோரி ஊரக வளர்ச்சிதுறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மழைநீர் வடிகால் அமைக்கும் பணி கல்வி நிறுவனங்கள் அரசின் கொரோனா தடுப்பு முறையை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்
பள்ளி, பாலிடெக்னிக், கல்லூரியில் படிக்கும் பிசி, எம்பிசி மாணவ, மாணவிகள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்
திருவாரூர் புதிய பேருந்து நிலைய டூ வீலர்கள் ஸ்டாண்டில் இட நெருக்கடி
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!