கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணி விரைவில் தொடங்குகிறது ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தகவல்
1/22/2022 12:55:31 AM
கலசபாக்கம், ஜன.22: கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தை குடிசை இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் குடிசை வீட்டில் வசிக்கும் மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்பட்டன. இதன் மூலம் நடுத்தர மக்கள் பயன்பெற்று வந்தனர். இதையொட்டி, ஊரக வளர்ச்சி துறை மூலம் குடிசை வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு, தகுதியான பயனாளிகள் பட்டியல் தயாரித்து, வீடு கட்டுவதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டது. ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இத்திட்டம் கைவிடப்பட்டது. இதனால் தகுதியான பயனாளிகள் பாதிக்கப்பட்டனர். தற்போது, தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்துள்ளதால் முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
முதற்கட்டமாக கிராம ஊராட்சிகளில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணிகள் ஒரு சில தினங்களில் தொடங்கப்பட உள்ளது. இதற்காக நேற்று வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட தகுதியான பயனாளிகள் விவரம், மத்திய, மாநில அரசுகளின் திட்டத்தில் வீடு கட்டியவர்கள் விவரம் மற்றும் விடுபட்டவர்கள் விவரங்கள் கணக்கு எடுக்கப்படவுள்ளது. மேலும், வடகிழக்கு பருவ மழையால் வீடு இடிந்து பாதிக்கப்பட்டவர்கள், அதேபோல் தீ விபத்தால் வீடுகளை இழந்தவர்கள் விவரங்களும் கணக்கெடுக்கப்பட உள்ளது. கிராமங்கள்தோறும் ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் முகாமிட்டு கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, தகுதியான பயனாளிகளுக்கு விரைவில் கான்கிரீட் வீடுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
விவசாயிக்கு நஷ்ட ஈடு வழங்ககோரி சாலைமறியல் 2 கி.மீட்டர் தூரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள் லாரி மோதி படுகாயமடைந்த
திருவண்ணாமலையில் பெட்ரோல் விலை ₹110ஐ தொட்டது வாகனஓட்டிகள் கடும் அதிர்ச்சி
சேத்துப்பட்டு அருகே கிணற்றில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு கொலை செய்து வீச்சா?.
செங்கம் அருகே 30 இருளர் இன குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்க டிஆர்ஓ ஆய்வு
சேத்துப்பட்டு அருகே பைக் மீது கார் மோதி முதியவர் பலி
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!