கொரோனா விழிப்புணர்வு வாகன பிரசாரம் மாநகராட்சி ஆணையர் தொடங்கி வைத்தார்
1/22/2022 12:11:31 AM
நாகர்கோவில், ஜன.22: கொரோனா விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் நேற்று தொடங்கி வைத்தார். குமரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசின் கள விளம்பர துறையின் திருநெல்வேலி மண்டல அலுவலகம் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி இணைந்து குமரி மாவட்டத்தில் கோரோனா நோய்த்தொற்று அதிகம் பாதித்த பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வாகன பிரசாரம் கோட்டார் காவல் நிலையம் முன்பு நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.
நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை தொடங்கி வைத்தார். இதில் திருநெல்வேலி களவிளம்பர அலுவலர் ஜூனி ஜேக்கப், கள விளம்பர உதவி அலுவலர் போஸ்வெல் ஆசிர், மாநகர் நல அதிகாரி டாக்டர் விஜயசந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது கோரோனா குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது.
மேலும் செய்திகள்
குமரியில் பரவலாக பெய்த சாரல் மழை
ஓடும் பஸ்சில்பெண்ணிடம் செயின் அபேஸ்
கன்னியாகுமரியில் பைக் அரசு பஸ் மோதல் மாணவர் உள்பட 2 பேர் பலி: வாலிபர் படுகாயம்
குமரி கடலில் சூறைக்காற்று விசைப்படகுகள் கரை திரும்பின மீன்பிடி தொழில் பாதிப்பு
குமரி முழுவதும் சூறைக்காற்றுடன் மழை
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் 100 அடி உயர கம்பத்தில் பறக்கும் தேசிய கொடி பயணிகள் மகிழ்ச்சி
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!