அரியலூர் அருகே பெண் டாக்டர் உள்பட 2 பேர் மீது மிளகாய் பொடி வீச்சு
1/22/2022 12:07:04 AM
செந்துறை,ஜன.22: அரியலூர் அருகே பெண் டாக்டர் உள்பட 2 பேர் மீது மிளகாய் பொடி வீசி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த வடக்கு இரும்புலிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் புகழேந்தி (35). அரியலூர் தாலுகா அலுவலகத்தில் நில அளவையராக பணிபுரிந்து வருகிறார். நேற்றுமுன்தினம் பணிமுடிந்து வீட்டுக்கு தனது பைக்கில் சென்றுள்ளார். அப்போது இரும்புலிக்குறிச்சி அருகேயுள்ள வெண்ணங்குறிச்சி பகுதியில் சென்ற போது அவ்வழியே மற்றொரு அதிவேகமாக பைக்கில் வந்த 2 பேர், புகழேந்தி மீது மிளகாய்பொடியை தூவிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
அதேபோல், கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்த பழனி மகள் பிரியா (30). செந்துறையில் குமிழியம் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்றுமுன்தினம் பணி முடிந்து ஸ்கூட்டியில் செந்துறை சென்றபோது, ஆனந்தவாடி பிரிவு சாலை அருகே எதிர்திசையில் பைக்கில் வந்த 2 பேர், பிரியா மீது மிளகாய் பொடியை தூவிச் சென்றுள்ளனர். இரும்புலிக்குறிச்சி காவல் நிலையத்தில் புகழேந்தி மற்றும் பிரியா இருவரும் தனித்தனியே புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
நாச்சாரம்மன் கோயில் தேரோட்டம்
பாடாலூர் மேற்கு கிராமத்தில் பொது பாதையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்
ஜெயங்கொண்டத்தில் தனியார் பள்ளி முன்புறம் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட முகாம் 79 பயனாளிகளுக்கு ரூ.34.66 லட்சத்தில் நலத்திட்ட உதவி
தா.பழூர் பகுதியில் வாய்க்கால் தூர்வாரும் பணி கலெக்டர் நேரில் ஆய்வு
பெரம்பலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை கண்டறிய 200 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைப்பு
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!