கரூர் அருகே ஏமூர் சாலையில் சாய்ந்து நிற்கும் மின்கம்பத்தில் படர்ந்துள்ள செடி, கொடிகள்
1/22/2022 12:06:01 AM
கரூர், ஜன.22: கரூர்-ஏமூர் சாலையோரம் சாய்ந்த நிலையில் உள்ள உயர் அழுத்த மின் கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்துள்ளதால் மின்வாரியதுறை மின்கம்பத்தை சரி செய்து செடிகொடிகளை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரே ஏமூர் மற்றும் திருச்சி பைபாஸ் சாலை செல்வதற்கான சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது.மேலும், சாலையின் இருபுறமும் விவசாய நிலங்களும், குடியிருப்புகளும் உள்ளன. இந்நிலையில், ஏமூர் ரயில்வே கேட் அருகே விவசாய நிலத்தில் எந்த நேரத்திலும் விழும் நிலையில் மின்கம்பம் உள்ளது. கடந்த பல மாதங்களாகவே இந்த மின்கம்பத்தின் நிலை இதுபோலத்தான் உள்ளது.இதனை சரி செய்ய வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பார்வையிட்டு கீழே விழும் நிலையில் உள்ள இந்த மின்கம்பத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் செய்திகள்
சீருடை பணியாளர் தேர்வாணைய சார்பு ஆய்வாளர் பணிக்கு எழுத்து தேர்வு
தினமும் மாலையில் தோகைமலையில் ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சுத்திறன் : வளர்த்தல் குறித்த பயிற்சி
கரூரில் முதன்முறையாக துவக்கம்; கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்
நகராட்சியை பசுமையாக மாற்ற புகளூர் பெண்கள் பள்ளியில் மாணவிகள் விழிப்புணர்வு உறுதிமொழி
கரூர் தபால் தந்தி அலுவலகம் முன் அக்னிபாத் திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
2 வார விடுமுறைக்கு பிறகு கரூர் மாவட்டத்தில் 1041 பள்ளிகள் திறப்பு
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!