வேகத்தடையில் பஸ் பழுதாகி நின்றதால் கரூர்- திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிப்பு
1/22/2022 12:05:39 AM
கரூர், ஜன.22: கரூர் திருமாநிலையூர் அருகே வேகத்தடையில் தனியார் பேருந்து திடீரென பழுதாகி நின்றதால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.திருச்சி, திண்டுக்கல் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து கரூர் வரும் அனைத்து பேருந்துகளும், வாகனங்களும் சுங்ககேட், திருமாநிலையூர் வழியாக கரூர் பேருந்து நிலையம் சென்று வருகிறது.நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் கரூர் நோக்கி வந்த தனியார் பேருந்து திருமாநிலையூர் வேகத்தடை முன்பு பிரேக் டவுனாகி நின்றது. இந்த நேரத்தில், கரூர் நோக்கி பின்னால் வந்த மற்றொரு அரசு பேரூந்தும், தனியார் பேருந்து அருகில் வந்து நின்ற போது, இரண்டு வாகனங்களும் ஒரே இடத்தில் நின்று கொண்டது. அரசு பேருந்தும் அங்கிருந்து புறப்பட முடியாமல் நின்றது. இதன் காரணமாக, பின்னால் வந்த அனைத்து வாகனங்களும் சுங்ககேட் வரை வரிசை கட்டி நின்றது. இதனால், அரைமணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், போக்குவரத்து போலீசாருடன், பொதுமக்களும் இணைந்து போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து இந்த சாலையில் சீரானது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
சீருடை பணியாளர் தேர்வாணைய சார்பு ஆய்வாளர் பணிக்கு எழுத்து தேர்வு
தினமும் மாலையில் தோகைமலையில் ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சுத்திறன் : வளர்த்தல் குறித்த பயிற்சி
கரூரில் முதன்முறையாக துவக்கம்; கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்
நகராட்சியை பசுமையாக மாற்ற புகளூர் பெண்கள் பள்ளியில் மாணவிகள் விழிப்புணர்வு உறுதிமொழி
கரூர் தபால் தந்தி அலுவலகம் முன் அக்னிபாத் திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
2 வார விடுமுறைக்கு பிறகு கரூர் மாவட்டத்தில் 1041 பள்ளிகள் திறப்பு
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!