இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
1/22/2022 12:03:57 AM
காஞ்சிபுரம்: குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு அனுமதி மறுப்பைக் கண்டித்து காஞ்சிபுரத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.தலைநகர் புதுடெல்லியில் குடியரசு தினத்தன்று நடைபெற உள்ள அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் தமிழகத்தை புறக்கணித்ததை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காஞ்சிபுரம் பெரியார் நினைவு தூண் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
தொகுதி செயலாளர் கமலநாதன் தலைமை தாங்கினார். துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகி ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய விடுதலையின் பவள விழாவை முன்னிட்டு, ஜனவரி 26ம் தேதி, குடியரசு நாளில், டெல்லியில் நடைபெறும் அலங்கார அணி வகுப்பில் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களின் அணிவகுப்புக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துவிட்டது.மருது சகோதரர்கள், வேலுநாச்சியார், செக்கிழுத்த செம்மல் வஉசி, பாரதியார் ஆகியோரின் உருவங்கள் இடம் பெற்ற தமிழக அரசின் அணிவகுப்பை, மத்திய அரசு நிராகரித்ததை கண்டித்து கண்டன கோஷமிட்டனர். இதில், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.வி.சீனிவாசன், மூர்த்தி, சுந்தரமூர்த்தி, ஸ்டாலின் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகள்
வாடகை கார் டிரைவர் கொலை வழக்கில் 2வது நாளாக சடலத்தை வாங்க உறவினர்கள் மறுப்பு: அரசு மருத்துவமனை முற்றுகை
வாடகை கொடுக்க முடியாததால் விரக்தி: சமையல் தொழிலாளி தற்கொலை
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,927 வழக்குகளுக்கு தீர்வு
காமாட்சி அம்மன் சன்னதி தெருவில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
திருக்கழுக்குன்றம் அடுத்த தண்டரை கிராமத்தில் ரூ. 2.22 கோடி மதிப்பீட்டில் பொது கட்டிடம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறப்பு: எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு
விலங்குகள் தவறி விழுவதை தவிர்க்க திறந்து கிடக்கும் கிணற்றுக்கு இரும்பு கம்பி வலை அமைக்கப்படுமா?
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்