வெவ்வேறு சம்பவம் 2 இளம்பெண்கள் திடீர் மாயம்
1/21/2022 4:25:58 AM
திருச்சி, ஜன. 21: திருச்சி-திண்டுக்கல் ரோடு கோரிமேட்டை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி ராஜேஸ்வரி (26). தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் கடந்த 7ம் தேதியும் தகராறு ஏற்பட்டதால் ராஜேஸ்வரி கணவரிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து கருப்பசாமி அளித்த புகாரின்பேரில் கன்டோன்மென்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான ராஜேஸ்வரியை தேடி வருகின்றனர். இதேபோல் திருச்சி மாவட்டம் லால்குடி வளவனூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகள் சவுமியா (22), சத்திரம் பஸ் நிலையம் அருகே தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 16ம் தேதி வேலைக்கு சென்ற சவுமியா, வீடு திரும்பவில்லை. உறவினர், தோழிகள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கனகராஜ் அளித்த புகாரின்பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சவுமியாவை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
கட்டிட உரிமையாளர் உள்பட மூவர் மீது வழக்கு
வழிபறி செய்த 2 பேர் கைது
மதுகுடித்ததை கண்டித்ததால் லோடுமேன் தூக்கிட்டு தற்கொலை
திருவிழாவில் பங்கேற்பதற்காக சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் திருச்சி வருகை
மின் ஏலம் குறித்து விழிப்புணர்வு கூட்டம்
சிறை வாச ரவுடி குண்டாசில் கைது
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!