மாவட்டத்தில் ஒரே நாளில் 1606 முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி
1/21/2022 4:22:03 AM
கிருஷ்ணகிரி, ஜன.21: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 1606 முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முன்கள பணியாளர்களுக்கு, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று நடந்தது. சூளகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற முகாமினை கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: கொரோனா தொற்றை தடுப்பதற்காக சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, காவல்துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் முன்கள பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டு 9 மாதங்கள் அல்லது 273 நாட்கள் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்று வரை 1606 முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், பொதுமக்களிடம் தொடர்பில் உள்ள அரசுத்துறை அலுவலர்கள், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களும் தவறாமல் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி முகாமில் கலந்துக்கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார். இந்த ஆய்வின் போது, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் கோவிந்தன், துணை கலெக்டர்(பயிற்சி) அபிநயா, பிடிஓ சிவகுமார், வட்டார மருத்துவ அலுவலர் வெண்ணிலா, மருத்துவர்கள் அபிநயா, வீணா மற்றும் சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
மேலும் செய்திகள்
மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு
வேப்பனஹள்ளி அருகே தக்காளி, வாழை தோட்டத்தை நாசம் செய்த யானைகள்
குறை தீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்
பொன்மலை பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
அனைத்து வங்கிகள் சார்பில் மாவட்டத்தில் 1,326 பயனாளிகளுக்கு ₹96 கோடி கடன் வழங்க ஏற்பாடு
ஜமாபந்தியில் 2 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்