மாட்டு கொட்டகையில் தீ மூதாட்டி உடல் கருகி சாவு
1/21/2022 4:21:48 AM
ஊத்தங்கரை, ஜன.21: ஊத்தங்கரை அருகே மாட்டு கொட்டகையில் ஏற்பட்ட தீ விபத்தில், மூதாட்டி உடல் கருகி உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே சிங்காரப்பேட்டை கொம்பப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயம்மாள்(80). இவர், நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு மாடுகளுக்கு தீவனம் வைப்பதற்காக, அருகில் உள்ள கொட்டகைக்கு சென்றுள்ளார். பின்னர், அங்கேயே படுத்து தூங்கி விட்டார். நள்ளிரவு நேரத்தில் திடீரென கொட்டகை தீப்பிடித்து எரிந்தது. அப்போது, அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஜெயம்மாள் திடுக்கிட்டு எழுந்துள்ளார். கொளுந்து விட்டு எரிந்த தீயை கண்டதும், அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். ஆனால், அவர் மீது தீப்பற்றிக்கொண்டது. இதில், உடல் கருகிய ஜெயம்மாள் கதறி துடித்தார். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், தீயை அணைத்து அவரை மீட்டனர். ஆனால், சிறிது நேரத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், சிங்காரப்பேட்டை போலீசார், அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு
வேப்பனஹள்ளி அருகே தக்காளி, வாழை தோட்டத்தை நாசம் செய்த யானைகள்
குறை தீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்
பொன்மலை பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
அனைத்து வங்கிகள் சார்பில் மாவட்டத்தில் 1,326 பயனாளிகளுக்கு ₹96 கோடி கடன் வழங்க ஏற்பாடு
ஜமாபந்தியில் 2 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்