ஆடு மேய்ந்த தகராறு விவசாயிக்கு அடி,உதை
1/21/2022 4:21:02 AM
மேச்சேரி, ஜன.21:மேச்சேரி அடுத்த சாம்ராஜ்பேட்டையை சேர்ந்த விவசாயி மதியழகன்(57). இவருக்கு அழகாகவுண்டனூர் பகுதியில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. நேற்று முன்தினம் காலை, தனது நிலத்துக்கு சென்ற போது, அவரது நிலத்தில் அதே பகுதியை சேர்ந்த 5 பேர், தங்களின் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தனர். இதுகுறித்து மதியழகன் அவர்களிடம் கேட்ட போது, அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், மதியழகனை எட்டி உதைத்து தாக்கினர். இதில் காயமடைந்த மதியழகன், மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், அதே பகுதியை சேர்ந்த சந்திரன், மதன், சாந்தி, குப்பாயி, மதன்ராஜ் ஆகிய 5பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
மேலும் செய்திகள்
கச்சுப்பள்ளியில் திட்ட செயலாக்க ஆலோசனை கூட்டம்
மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த 1,049 குழந்தைகளுக்கு நிவாரணம்
ஆதரவற்றோர் இல்ல குழந்தைகளுக்கு அன்னதானம்
தம்மம்பட்டி பஸ் நிலையத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் ஆய்வு
தமிழக முதல்வர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தில் கொட்டும் மழையில் அமைச்சர் நேரு ஆய்வு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை
திருச்செங்கோட்டில் செவிலியர் தின ஊர்வலம்
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!