ஜல்லிக்கட்டு நடத்த வங்காநரி பிடித்த 6 பேர் மீது வழக்கு
1/21/2022 4:20:49 AM
வாழப்பாடி, ஜன.21: வாழப்பாடி சுற்றுவட்டார பகுதியில், தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த வங்கா நரியை பிடித்த 6 பேர் மீது வனத்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். பொங்கல் பண்டிகையையொட்டி, வாழப்பாடி சுற்றுவட்டாரத்தில் உள்ள சின்னமநாயக்கன்பாளையம், ரங்கனூர் மற்றும் கொட்டவாடி ஆகிய பகுதிகளில் மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. அப்போது, மாலை நேரத்தில் ஏற்கனவே வனப்பகுதியில் இருந்து கூண்டு வைத்து பிடித்து வந்திருந்த வங்கா நரியை கொண்டு, தடையை மீறி கோயிலை சுற்றி வந்து ஜல்லிக்கட்டு நடத்தினர். பின்னர், வங்கா நரியை வனப்பகுதியில் விடுவித்தனர். அடுத்தடுத்த நாட்களில் நடத்தப்பட்ட வங்கா நரி ஜல்லிக்கட்டு குறித்து, கிராமத்தில் நேரில் விசாரணை நடத்திய வனத்துறை அதிகாரிகள், வங்கா நரியை பிடித்த வெள்ளையன்(42), ஆறுமுகம்(65), இளவரசன்(47), வெங்கடாஜலம்(53), அர்ஜூனன்(55) உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குபதிவு செய்தனர். மேலும் தலா ₹25 ஆயிரம் வீதம் ₹1.50 லட்சம் அபராதம் விதித்து வசூலித்தனர்.
மேலும் செய்திகள்
கச்சுப்பள்ளியில் திட்ட செயலாக்க ஆலோசனை கூட்டம்
மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த 1,049 குழந்தைகளுக்கு நிவாரணம்
ஆதரவற்றோர் இல்ல குழந்தைகளுக்கு அன்னதானம்
தம்மம்பட்டி பஸ் நிலையத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் ஆய்வு
தமிழக முதல்வர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தில் கொட்டும் மழையில் அமைச்சர் நேரு ஆய்வு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை
திருச்செங்கோட்டில் செவிலியர் தின ஊர்வலம்
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!