பெயிண்டர் கொலையில் மேலும் 2 பேர் கைது
1/21/2022 4:20:43 AM
மல்லூர், ஜன.21: சேலம் மாவட்டம், நாழிக்கல்பட்டியை சேர்ந்த பெயிண்டர் திருநாவுக்கரசு. இவரை கடந்த மாதம் 17ம்தேதி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் வைத்து கும்பல் ஒன்று படுகொலை செய்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த மல்லூர் போலீசார், இதுவரை 21 பேரை கைது செய்துள்ளனர். இந்த கொலை வழக்கில், ரூரல் டிஎஸ்பி தையல்நாயகி, மல்லூர் இன்ஸ்பெக்டர் கலையரசி தலைமையிலான தனிப்படை போலீசார், மேலும் சிலரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று, பெயிண்டர் திருநாவுக்கரசு கொலையில் தொடர்புடைய நாழிக்கல்பட்டி மாரியப்பன் மகன் கார்த்தி (எ) கார்த்திகேயன் (22), அம்பேத்கர் நகரை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் மகன் நவீன்குமார் (21) ஆகிய இருவரை, நிலவரப்பட்டியில் உள்ள தனியார் பார்சல் சர்வீஸ் அலுவலகம் அருகே வைத்து, போலீசார் கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
கோயில் கும்பாபிஷேக விழாவில் 3 மூதாட்டிகளிடம் 15 பவுன் நகை பறிப்பு
ஆத்தூர் உயர்மட்ட பாலம் பணிக்காக ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு
கெங்கவல்லி அருகே மின்கசிவால் குடிசை வீட்டில் தீ விபத்து
கரியகோயில் அணையில் இருந்து பழைய பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
அரசுப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகளை கலெக்டர் திடீர் ஆய்வு
நாமகிரிப்பேட்டை அருகே 7ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்