வீதியில் கேட்பாரற்று கிடந்த 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
1/21/2022 4:07:01 AM
விழுப்புரம், ஜன. 21: விழுப்புரம் மாவட்டத்தில் பொது மக்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவது குறித்தும், உணவு பொருட்களை பதுக்குதல் மற்றும் கடத்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கும் பணியில் மாவட்ட நிர்வாகமும், நுகர்பொருள் பறக்கும் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே ஆட்சியருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் விழுப்புரம் அருகே வீரமூர் கிராமத்தில் குடிமைப்பொருள் வழங்கல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சிவன் கோயில் தெருவில், ஜக்குபாய் என்பவரது வீட்டு வாசலில் கேட்பாரற்று 86 சாக்கு மூட்டைகளில் 4,300 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசி கிடந்தது தெரியவந்தது. தொடர்ந்து அதனை பறிமுதல் செய்து, வழக்குப்பதிந்து குற்றவாளிகளை கண்டறிய குடிமை பொருள் காவல்துறைக்கு மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டார்.
மேலும் செய்திகள்
கோடை விடுமுறை முடிந்து கடலூர் மாவட்டத்தில் 2,180 பள்ளிகள் திறப்பு
வீடு கட்டும் திட்டத்தில் அலைக்கழிப்பு ஆட்சியரிடம் ரேஷன் கார்டை ஒப்படைக்க வந்த மாற்றுத்திறனாளி தம்பதி
நடராஜர் கோயிலுக்கு சொந்தமான குளம், நிலங்களை மீட்க வேண்டும்
கருகும் பயிர்கள்: விவசாயிகள் வேதனை
பழுதான சாலையால் வாகனஓட்டிகள் அவதி
உடல்நலக் குறைவால் இறந்த குரங்கு இறுதிச்சடங்கு செய்த கிராம மக்கள்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்