சாராயம் விற்ற 3 பேர் கைது
1/21/2022 4:04:24 AM
திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் ஆர்எம்ஐ நகரில் கள்ளச்சாராயம் விற்பதாக செங்கல்பட்டு மது விலக்கு அமல் பிரிவு டிஎஸ்பி துரைப்பாண்டியனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அப்பகுதிக்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆர்எம்ஐ நகரில் உள்ள முட்புதரில் மறைத்து வைத்திருந்த 105 லிட்டர் சாராயத்தை கைப்பற்றினர். இதுதொடர்பாக புதுப்பட்டினத்தை சேர்ந்த சேட்டு (51) என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் புதுச்சேரி, திண்டிவனம் ஆகிய பகுதிகளில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்றது தெரிந்தது. இதையடுத்து, சாராயம் கடத்துவதில் உடந்தையாக இருந்த அடையாளச்சேரியை சேர்ந்த கிருபாகரன் (28), பேரம்பாக்கத்தை சேர்ந்த புருஷோத்தமன் (41) ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
நந்திவரம் சுகாதார நிலைய வளாகத்தில் தீ தடுப்பு ஒத்திகை முகாம்
தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம்
பசுமை காஞ்சி அறக்கட்டளை சார்பில் அரசு நடுநிலைப் பள்ளிக்கு தொலைக்காட்சி பெட்டி: டிஐஜி சத்யபிரியா வழங்கினார்
வாகன விபத்தில் தொழிலாளி பலி
மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் சிறப்பு அதிகாரி ஆய்வு
அரையப்பாக்கம், ஏறுப்பாக்கம் கிராமங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்: எம்பி, எம்எல்ஏ திறந்து வைத்தார்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!