அடகு கடைக்காரருக்கு வெட்டு: வாலிபருக்கு வலை
1/21/2022 4:04:11 AM
மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே மாமண்டூர் ஊராட்சியில் ஜுவல்லரி மற்றும் அடகு கடை நடத்தி வருபவர் தர்மா. நேற்று மாலை மாமண்டூர் அடுத்த வடபாதி கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன் (32) என்பவர், நகை அடகு வைக்க, தர்மா கடைக்கு சென்றார். நகை அடகு வாங்குவதில் சந்தேகம் ஏற்பட்டதால், தர்மா நகையை அடகு வாங்க முடியாது என கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த சிலம்பரசன், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தர்மாவின் தலையில் 4 இடங்களில் வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றார். படுகாயமடைந்த அவர், அலறி துடித்தபடி வெளியே ஓடி வந்தார். இதை பார்த்ததும், அக்கம் பக்கத்தினர், தர்மாவை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின்படி படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய சிலம்பரசனை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
நந்திவரம் சுகாதார நிலைய வளாகத்தில் தீ தடுப்பு ஒத்திகை முகாம்
தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம்
பசுமை காஞ்சி அறக்கட்டளை சார்பில் அரசு நடுநிலைப் பள்ளிக்கு தொலைக்காட்சி பெட்டி: டிஐஜி சத்யபிரியா வழங்கினார்
வாகன விபத்தில் தொழிலாளி பலி
மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் சிறப்பு அதிகாரி ஆய்வு
அரையப்பாக்கம், ஏறுப்பாக்கம் கிராமங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்: எம்பி, எம்எல்ஏ திறந்து வைத்தார்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!