இந்திய அளவிலான ஜூனியர் பளுதூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற காரைக்கால் மாணவர்கள்
1/21/2022 12:19:01 AM
காரைக்கால், ஜன.21: இந்திய அளவிலான ஜூனியர் பளுதூக்கும் போட்டியில் காரைக்கால் மாணவர்கள் வெள்ளிப்பதக்கம் பெற்று சாதனை படைத்தனர்.ராஜஸ்தான் மாநிலம் உதம்பூரில் இந்திய அளவிலான ஜூனியர் மற்றும் சப்ஜூனியர் பளு தூக்கும் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த அவ்வையார் அரசு பெண்கள் கல்லூரியில் பயிலும் செல்வி ஹெலான்ஜி என்ற மாணவி 52 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும், அரசு மேல்நிலைப்பள்ளி தேனூரில் பயிலும் விக்ரம் என்ற மாணவன் 53 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும் மற்றும் வஉசி கோட்டுச்சேரி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி பூங்குழலி 43 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்று புதுச்சேரி மாநிலத்திற்கு மற்றும் காரைக்கால் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.வெற்றி பெற்று பதக்கத்துடன் ஊர் திரும்பிய மாணவர்களுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திரபிரியங்கா, எம்எல்ஏ., நாஜீம் மற்றும் நாகதியாகராஜன், காரைக்கால் கலெக்டர் அர்ஜுன் சர்மாவையும், சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாணவர்களின் திறன்களை கண்டறிந்து ஊக்குவித்து, திறம்பட பயிற்சி அளித்த பயிற்சியாளர் கணேஷ் பாராட்டப்பெற்றார்.
மேலும் செய்திகள்
கொள்ளிடம் அருகே நீர்த்தேக்க தொட்டியில் அழுகிய நிலையில் மிதந்த கொக்கு குடிநீரில் கலந்ததால் பொதுமக்கள் அவதி
எண்ணை ஆலை விரிவாக்க பணிக்கு கையகப்படுத்திய நிலத்திற்கு உரிய தொகை வழங்க வேண்டும்
காரைக்கால் முத்துமாரி நாகத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம்
அசானி புயலால் 4 நாட்களுக்கு பின் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்
பைக் மீது அரசு பேருந்து மோதி வாலிபர் பரிதாப பலி
மாணலூரில் மக்கள் தொடர்பு முகாம்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!