இணையதளம் வாயிலாக தொழில் நிறுவனங்கள் பதிவை புதுப்பிக்க விண்ணப்பிக்க வேண்டும்
1/21/2022 12:18:45 AM
கரூர், ஜன. 21: கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள் பதிவை புதுப்பிக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் கிருஷ்ணவேணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:கரூர் மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், தங்களின் ஒருங்கிணைந்த ஆண்டறிக்கையை இணையதளம் வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், புதிதாக பதிவு செய்வது மற்றும் ஏற்கனவே உள்ள பதிவை புதுப்பிக்க www.labour.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கட்டணங்களையும், இணையதளம் வாயிலாக செலுத்தலாம்.தொழில், வணிக நிறுவனங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா? என தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வு நடத்துவார்கள். அப்போது முரண்பாடுகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
சீருடை பணியாளர் தேர்வாணைய சார்பு ஆய்வாளர் பணிக்கு எழுத்து தேர்வு
தினமும் மாலையில் தோகைமலையில் ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சுத்திறன் : வளர்த்தல் குறித்த பயிற்சி
கரூரில் முதன்முறையாக துவக்கம்; கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்
நகராட்சியை பசுமையாக மாற்ற புகளூர் பெண்கள் பள்ளியில் மாணவிகள் விழிப்புணர்வு உறுதிமொழி
கரூர் தபால் தந்தி அலுவலகம் முன் அக்னிபாத் திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
2 வார விடுமுறைக்கு பிறகு கரூர் மாவட்டத்தில் 1041 பள்ளிகள் திறப்பு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்