கோயிலில் சிலைகள் திருட்டு
1/21/2022 12:17:39 AM
வேலுார், ஜன.21–: வேலூர் சத்துவாச்சாரி பேஸ்–2 பகுதியைச் சேர்ந்தவர் ஞானசுந்தரம்(64). இவர் அதேபகுதியில் திருபாதரசமகாலிங்கேஸ்வரர் கோயிலை பராமரித்து வந்தார். கடந்த 12ம் தேதி காலை 8.30 மணிக்கு திறந்து பூஜைகள் செய்து இரவு 9.30 மணிக்கு பிறகு பூடப்பட்டது. தொடர்ந்து, மறுநாள் காலை வழக்கம்போல் பூஜை செய்வதற்காக ஞானசுந்தரம் வந்தார். பூஜை அறைக்குள் சென்று பார்த்த போது கோயிலின் மேற்புற ஜன்னலை உடைத்து உள்ளே சென்ற மர்ம ஆசாமிகள் பூஜைக்கு வைக்கப்பட்டு இருந்த பித்தளை கோமதா சிலை, ஓட்டகம் சிலை, குதிரை சிலை, சிங்கம் சிலை ஆகியவை மெட்டலால் செய்யப்பட்டவை. மேலும், பித்தளை தீபம் ஒன்று, பாதரச லிங்கம் ஒன்று ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஞானசுந்தரம் சத்துவாச்சாரி போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்
ேவலூர் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு ஒருநாள் புத்தாக்க பயிற்சி எம்எல்ஏ, மேயர் பங்கேற்பு
திருவலம் பேரூராட்சியில் பணி நியமனம், வரிமேல் முறையீட்டுக் குழு உறுப்பினர் திமுகவினர் போட்டியின்றி தேர்வு
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் வாரிசுகள் நிவாரணத்திற்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
கூட்டுறவு வங்கி பேரவைக்கூட்டம் குடியாத்தத்தில்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் பேரணாம்பட்டு ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளியில்
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!