தேவாரம் மலையடிவாரத்தில் அவரை சாகுபடி ஜோரு
1/20/2022 2:06:53 AM
தேவாரம், ஜன. 20: தேவாரம் மலையடிவாரத்தில் அவரை சாகுபடி விவசாயம் நல்ல முறையில் நடக்கிறது என விவசாயிகள் கூறுகின்றனர். தேனி மாவட்டத்தில், தேவாரம், கோம்பை, கம்பம், உள்ளிட்ட ஊர்களில் சுமார், 150 ஏக்கர் பரப்பில் அவரை சாகுபடி நடக்கிறது. இங்கு விளையும், அவரைக்காய் பறிக்கப்பட்டு, தேனி, மதுரை மார்க்கெட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது நிலத்தடி நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளதால், மோட்டார் பம்ப் செட்களில் தண்ணீர் அதிகமாக வருகிறது. இதனால் அவரை சாகுபடியில் மிக தீவிரமாக விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘அவரை சாகுபடி மலையடிவார நிலங்களில் பச்சை பசேலென காட்சி தருகிறது. தொடர்ந்து இதே நிலை நீடித்தால், கோடை காலங்களில் அதிகமான அளவில் விவசாயம் செய்ய முடியும். அவரை விளைச்சல் இந்தாண்டு அமோகமாக இருக்கும்,’’ என்றனர்
மேலும் செய்திகள்
கேரளாவில் கூடுதல் அபராதம் கம்பத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
சோத்துப்பாறை அணை பாசன நீர் திறக்கும் முன் வாய்க்கால்களில் உடைப்பை சீரமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
வண்டிப்பெரியாறில் பஸ், லாரி மோதிய விபத்தில் 25 பேர் காயம்
இரு சிறுமிகள் பலியான விவகாரம்: பண்ணைப்புரம் செயல் அலுவலர், பொறியாளர் சஸ்பெண்ட்
வனவிலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப்பன்றியை நீக்க வேண்டும்: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
கண்டமனூரில் குடிநீர் தட்டுப்பாடு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!