அரசு பஸ்சில் மது கடத்தல்
1/20/2022 1:52:34 AM
கிருஷ்ணகிரி, ஜன.20: கிருஷ்ணகிரி புதிய பஸ்நிலையத்தில், கடந்த 17ம் தேதி டிக்கெட் பரிசோதகராக ஜெயவேலு ஆய்வு மேற்கொண்டார். அப்போது நுழைவு வாயிலில், பெங்களூருவில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பஸ்சை நிறுத்தி சோதனையிட்டார். அந்த பஸ்சில் கேட்பாரற்று 2 பேக்குகள் இருந்தது. அது யாருடையது என கேட்ட போது யாரும் எதுவும் தெரிவிக்கவில்லை. இதுகுறித்த தகவலின் பேரில், போலீசார் வந்து சோதனை செய்த போது, ஒரு பேக்கில் ₹30 ஆயிரம் மதிப்பிலான 500 குவார்ட்டர் பாட்டில்களும், மற்றொரு பேக்கில் ₹5 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களும் இருந்தது. இதையடுத்து பஸ்சில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, விழுப்புரம் மாவட்டம் அடூர்குழப்பாக்கம் சேர்ந்த காமராஜ்(50) மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் செருமந்தலூர் குப்புசாமி மனைவி உத்தராம்பாள்(34) ஆகியோரது பேக்குகள் என்பதும், விற்பனை செய்ய அவற்றை கடத்தி செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், குவார்ட்டர் பாட்டில்கள், புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காமராஜை ஓசூர் கிளை சிறையிலும், உத்தராம்பாளை கிருஷ்ணகிரி கிளை சிறையிலும் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு
வேப்பனஹள்ளி அருகே தக்காளி, வாழை தோட்டத்தை நாசம் செய்த யானைகள்
குறை தீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்
பொன்மலை பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
அனைத்து வங்கிகள் சார்பில் மாவட்டத்தில் 1,326 பயனாளிகளுக்கு ₹96 கோடி கடன் வழங்க ஏற்பாடு
ஜமாபந்தியில் 2 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!