திருநள்ளாறு கோயிலில் எம்எல்ஏ ஆதரவாளருக்கு ‘பளார்’
1/20/2022 12:08:08 AM
காரைக்கால், ஜன.20: திருநள்ளாறு கோயிலில் எம்எல்ஏ., சிவா எதிரிலேயே அவரது ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.திருநள்ளாறு பிடாரி கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோபி(41), டிரைவர். திருநள்ளாறில் நேற்று முன்தினம் பிடாரி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு கோபி தனது நண்பர்களுடன் அன்னதானம் வழங்கி கொண்டிருந்தார். அதில் கலந்துகொள்வதற்காக திருநள்ளாறு தொகுதி சுயேச்சை எம்எல்ஏ., சிவா வந்தார். எம்எல்ஏ., வந்த நேரத்தில் அப்பகுதியைச் சேர்ந்த நாகராஜ்(33) என்பவர் கோயிலுக்கு வந்த அனைவரையும் திட்டிக்கொண்டிருந்தார்.
‘எம்.எல்.ஏ வந்திருப்பதால் அமைதி காக்கும்படியும், எதுவாக இருந்தாலும் அவர் சென்றபின் பேசிக் கொள்ளலாம்’ என்றும் நாகராஜிடம், கோபி தெரிவித்தார். இதனால் நாகராஜ் ஆவேசமாக கோபியைத் திட்டி, அவரது கன்னத்தில் அறைந்தார். எதிர்பாராதவிதமாக தனது ஆதரவாளரை நாகராஜ் தாக்கியதால் எம்எல்ஏ., சிவா அதிர்ச்சியடைந்தார். கோயில் விழாவில் எம்எல்ஏ எதிரில் அவரது ஆதரவாளரை தாக்கிய சம்பவம் திருநள்ளாறு முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. இது குறித்து கோபி திருநள்ளாறு காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை விசாரித்த ஆய்வாளர் லெனின்பாரதி மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவான நாகராஜை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
நாகை மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு
வேதாரண்யத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்
கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் புதிதாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமையும் இடம்
அனைவருக்கும் முறையாக கிடைக்க ஒத்துழைக்காதவர்கள்; வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும்: பேரூராட்சி செயல் அலுவலர் எச்சரிக்கை
காரைக்கால் கலெக்டராக மொஹமத் மன்சூர் நியமனம்
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;