கரூரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கந்து வட்டிக்கொடுமை தடுத்து நிறுத்த நடவடிக்கை
1/19/2022 12:25:07 AM
கரூர், ஜன. 19: கரூர் நகரில் டெக்ஸ்டைல்ஸ், கொசுவலை, பஸ்பாடி போன்ற மூன்று முக்கிய தொழில்கள் உள்ளன. இந்த தொழிலை நம்பி நகரைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களை குறி வைத்து, கந்து வட்டிக்கு விடும் நபர்கள் கரூர் பகுதியில் அதிகரித்து வருகின்றனர். மீட்டர், எக்ஸ்பிரஸ், தின வட்டி என்ற அடிப்படையில் தொழிலாளர்களுக்கு பணத்தை கொடுத்து விட்டு, பின்னர், கொடுத்த பணத்தை விட பல மடங்கு வட்டியாக வசூலித்து அவர்களை கொடுமைப்படுத்தும் நிகழ்வுகள் கரூர் பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. கந்து வட்டி பிரச்னை குறித்து, பாதிக்கப்பட்ட மக்கள், புகார் தரவும் அச்சப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், இது குறித்தான விழிப்புணர்வு மக்களிடம் அதிகளவு போய்ச்சேரவில்லை என்றே கூறப்படுகிறது. இந்த கந்து வட்டி கொடுமை காரணமாக பல குடும்பத்தினர் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, இந்த பிரச்னை குறித்தும், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிப்பது குறித்தும் தேவையான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த தேவையான ஏற்பாடுகளை துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
சீருடை பணியாளர் தேர்வாணைய சார்பு ஆய்வாளர் பணிக்கு எழுத்து தேர்வு
தினமும் மாலையில் தோகைமலையில் ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சுத்திறன் : வளர்த்தல் குறித்த பயிற்சி
கரூரில் முதன்முறையாக துவக்கம்; கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்
நகராட்சியை பசுமையாக மாற்ற புகளூர் பெண்கள் பள்ளியில் மாணவிகள் விழிப்புணர்வு உறுதிமொழி
கரூர் தபால் தந்தி அலுவலகம் முன் அக்னிபாத் திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
2 வார விடுமுறைக்கு பிறகு கரூர் மாவட்டத்தில் 1041 பள்ளிகள் திறப்பு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்