மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
1/12/2022 3:17:59 AM
சங்ககிரி: சங்ககிரி அருகே முனியப்பன்பாளையம் கோட்டபாளையத்தான் காடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம்(58). போஸ்ட் மாஸ்டரான இவரது மகன் கிருஷ்ணா(16). இவர், பிளஸ்1 படித்து வந்தார். சுப்பிரமணியம் வழக்கம்போல் நேற்று காலை 5 மணிக்கு நடைபயிற்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பியபோது குளியறையில் சத்தம் கேட்டு ஓடி போய் பார்த்தார். அங்கு, வலது உள்ளங்கையில் தோல் உரிந்த நிலையில் கிருஷ்ணா சுய நினைவின்றி கிடந்துள்ளார். மேலும், அவரது கையில் குளிப்பதற்காக தண்ணீருக்குள் போடும் வாட்டர்கீட்டர் இருந்துள்ளது. வாட்டர்கீட்டரை போடும்போது மின்சாரம் தாக்கியது தெரிய வந்தது. இதைப்பார்த்து பதறிய சுப்பிரமணியம் கிருஷ்ணாவை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கிருஷ்ணா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சங்ககிரி எஸ்ஐ அப்பு வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.
மேலும் செய்திகள்
மகுடஞ்சாவடி வட்டாரத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட துவக்க விழா கிராம வேளாண் வளர்ச்சி திட்டம்
குழந்தையின் உயிரை காப்பாற்ற உதவி கேட்டு தந்தை கண்ணீர் மனு
சேலம் மாவட்டத்தில் ரயில்வே மேம்பால பணிகளை தணிக்கை குழுவினர் ஆய்வு
கிலோ ₹100க்கு விற்பனை செய்யும் நேரத்தில் கடைகளில் தக்காளி கிரேடு திருடிய ‘டிப்டாப்’ வாலிபர் சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு; 3 பேருக்கு வலை
கச்சுப்பள்ளியில் திட்ட செயலாக்க ஆலோசனை கூட்டம்
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!