இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்
1/12/2022 3:14:48 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த காதல் கணவர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கிருஷ்ணகிரி அருக பெரியகோட்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ்(26). கார் டிரைவரான இவர், பானுப்பிரியா(எ)அர்ச்சனா(23) என்பவரை காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கடந்த டிசம்பர் மாதம் 1ம் தேதி நடைபெற்றது. இதற்கு யுவராஜின் தாய் அமுதவள்ளி(48), அண்ணன் பார்த்திபன்(31) ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக காதல் தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. யுவராஜ் தனது தாயார் அமுதவள்ளி, சகோதரர் பார்த்திபன் ஆகியோருடன் சேர்ந்து பானுப்பிரியாவை சாதி பெயரை கூறி திட்டியுள்ளார். மேலும், கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதுகுறித்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பானுப்பிரியாக புகார் அளித்தார். அதன்பேரில், டிஎஸ்பி விஜயராகவன் விசாரித்து யுவராஜ், அமுதவள்ளி மற்றும் பார்த்திபன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் செய்திகள்
மகுடஞ்சாவடி வட்டாரத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட துவக்க விழா கிராம வேளாண் வளர்ச்சி திட்டம்
குழந்தையின் உயிரை காப்பாற்ற உதவி கேட்டு தந்தை கண்ணீர் மனு
சேலம் மாவட்டத்தில் ரயில்வே மேம்பால பணிகளை தணிக்கை குழுவினர் ஆய்வு
கிலோ ₹100க்கு விற்பனை செய்யும் நேரத்தில் கடைகளில் தக்காளி கிரேடு திருடிய ‘டிப்டாப்’ வாலிபர் சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு; 3 பேருக்கு வலை
கச்சுப்பள்ளியில் திட்ட செயலாக்க ஆலோசனை கூட்டம்
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!