கொரோனா தடுப்பு விழிப்புணர்வு
1/12/2022 3:13:41 AM
காரிமங்கலம்: காரிமங்கலம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று நடந்த காரிமங்கலம் வாரச்சந்தையில், பேரூராட்சி செயல் அலுவலர் சேகர், தலைமை எழுத்தர் பெருமாள் மற்றும் சுகாதார பணியாளர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு, முகக்கவசம் அணியாமல் வியாபாரம் செய்த வியாபாரிகள் மற்றும் பொது மக்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள், சமூக இடைவெளியை பின்பற்றி அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக்கொண்டனர்.
தொடர்ந்து பஸ் ஸ்டாண்ட் ராமசாமி கோயில் கடைவீதி ஆகிய பகுதிகளில் ரோந்து சென்று, வணிக நிறுவனங்கள் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் அபராதம் மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சாலைகளில் முகக்கவசம் அணியாமல், இருசக்கர வாகனங்கள் மற்றும் நடந்து சென்ற பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது.
மேலும் செய்திகள்
மகுடஞ்சாவடி வட்டாரத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட துவக்க விழா கிராம வேளாண் வளர்ச்சி திட்டம்
குழந்தையின் உயிரை காப்பாற்ற உதவி கேட்டு தந்தை கண்ணீர் மனு
சேலம் மாவட்டத்தில் ரயில்வே மேம்பால பணிகளை தணிக்கை குழுவினர் ஆய்வு
கிலோ ₹100க்கு விற்பனை செய்யும் நேரத்தில் கடைகளில் தக்காளி கிரேடு திருடிய ‘டிப்டாப்’ வாலிபர் சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு; 3 பேருக்கு வலை
கச்சுப்பள்ளியில் திட்ட செயலாக்க ஆலோசனை கூட்டம்
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!