தள்ளுவண்டியில் மது அருந்த அனுமதி: பெண் உள்பட 3 பேர் கைது
1/12/2022 3:01:08 AM
ஈரோடு: ஈரோடு தெற்கு போலீசார் குமலன்குட்டை பகுதியில் நேற்றுமுன்தினம் மாலை ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடைக்கு அருகில் உள்ள ஒரு தள்ளுவண்டியில் கூட்டம் அதிகமாக காணப்பட்டதையடுத்து அங்கு சென்று பார்த்த போது, மது அருந்திக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, தள்ளுவண்டியில் மது அருந்த அனுமதித்ததாக புதுக்கோட்டை, தென்நகர் வீதியை சேர்ந்த ஆறுமுகம் (48) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதேபோல், சூரம்பட்டிவலசு, லட்சுமிநகரில் தள்ளுவண்டி கடையில் மது அருந்த அனுமதித்த ஈரோடு சங்குநகர், பட்டேல் வீதியை சேர்ந்த பிரபாகரன் மனைவி வளர்மதி (38), சூரம்பட்டி பட்டேல் வீதியை சேர்ந்த சுரேஸ் மகன் ஸ்ரீகாந்த் (21) ஆகியோரை ஈரோடு தெற்கு போலீசார் கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்
அழகுநாச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
திருப்பூரில் ஜவுளிக்கடை உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் திருட்டு
நாச்சிபாளையத்தில் சீரான குடிநீர் விநியோகம் கோரி காலிக் குடங்களுடன் மக்கள் மறியல்
ஊருக்குள் யானை வருவதை முன்கூட்டியே அறிய உதவும் கருவி பொறுத்தும் பணி தீவிரம்
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!