திருவலம் அருகே வீடு புகுந்து 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 15 வயது சிறுவன் கைது
1/12/2022 12:13:19 AM
திருவலம், ஜன.12: திருவலம் அருகே வீடு புகுந்து 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 15 சிறுவனை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். வேலூர் மாவட்டம், திருவலம் அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் 7 வயது சிறுமி. இவரது பெற்றோர் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டனர். இதனால் தனியாக இருந்த சிறுமி வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் வீட்டினுள் புகுந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். இதனால் சிறுமி அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு பக்கத்து வீட்டிலிருந்த பாட்டி அங்கு வந்தார். இதையடுத்து சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து சிறுமியின் தாய் திருவலம் போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் எஸ்ஐ முத்துச்செல்வன் வழக்குப்பதிந்து சிறுவனை கைது செய்து வேலூர் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.
மேலும் செய்திகள்
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்
ேவலூர் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு ஒருநாள் புத்தாக்க பயிற்சி எம்எல்ஏ, மேயர் பங்கேற்பு
திருவலம் பேரூராட்சியில் பணி நியமனம், வரிமேல் முறையீட்டுக் குழு உறுப்பினர் திமுகவினர் போட்டியின்றி தேர்வு
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் வாரிசுகள் நிவாரணத்திற்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
கூட்டுறவு வங்கி பேரவைக்கூட்டம் குடியாத்தத்தில்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் பேரணாம்பட்டு ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளியில்
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!