காட்பாடியில் நள்ளிரவு சோதனை ரயிலில் கடத்திய 15 கிலோ கஞ்சா பறிமுதல்
1/12/2022 12:13:14 AM
வேலூர், ஜன.12: காட்பாடி ரயில் நிலையத்தில் நள்ளிரவு நடத்திய சோதனையில் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்திய 15 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆந்திர மாநிலத்தில் இருந்து வேலூர் வழியாக பஸ், ரயில், கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் தமிழகத்துக்கு கஞ்சா கடத்தப்படுகிறது. இதனால் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். இதேபோல் ரயில்களிலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் ரகசிய தகவலின் அடிப்படையில் திடீர் சோதனைகளும் நடத்தப்படுகிறது. இதன் மூலம் கிலோ கணக்கில் கஞ்சா பறிமுதல் செய்யப்படுகிறது. மேலும் கடத்தல்காார்களையும் போலீசார் கைது செய்து வருகின்றனர். ஆனாலும் கஞ்சா கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை.
இந்நிலையில், காட்பாடி ரயில் நிலையம் 4வது பிளாட்பாரத்தில், அட்டியா-யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் வந்து நின்றது. அப்போது காட்பாடி ரயில்வே போலீசார் ரயிலில் ஏறி ஒவ்வொரு பெட்டியாக சோதனை செய்தனர். அப்போது, டி2 கோச்சில் சோதனை செய்தபோது, கழிவறையில் கேட்பாற்று கிடந்த 3 பைகளை கைப்பற்றினர். அதில் சோதனை செய்தபோது, 15 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கஞ்சா கடத்திய நபர்கள் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்
ேவலூர் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு ஒருநாள் புத்தாக்க பயிற்சி எம்எல்ஏ, மேயர் பங்கேற்பு
திருவலம் பேரூராட்சியில் பணி நியமனம், வரிமேல் முறையீட்டுக் குழு உறுப்பினர் திமுகவினர் போட்டியின்றி தேர்வு
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் வாரிசுகள் நிவாரணத்திற்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
கூட்டுறவு வங்கி பேரவைக்கூட்டம் குடியாத்தத்தில்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் பேரணாம்பட்டு ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளியில்
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!