விளாத்திகுளத்தில் வீடுபுகுந்து வாலிபர் திருடிய நகை, பணத்தை மீட்ட தனிப்படை போலீசார் எஸ்பி ஜெயக்குமார் பாராட்டு
1/12/2022 12:12:13 AM
குளத்தூர், ஜன. 12: விளாத்திகுளத்தில் வீடு புகுந்து வாலிபர் திருடிய நகை, பணத்தை மீட்ட தனிப்படை போலீசாரை எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காமராஜர் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (40). விளாத்திகுளம் பஜாரில் ஜெராக்ஸ் கடை நடத்திவரும் இவர், கடந்த 2021ம் ஆண்டு ஜன. 11ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பியபோது கதவை திறந்து உள்ளே புகுந்த திருடர்கள், பீரோவை உடைத்து அதில் இருந்த 11 பவுன் நகைகள் மற்றும் ரூ. 35 ஆயிரத்தை திருடிச் சென்றிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். புகாரின் பேரில் விளாத்திகுளம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவந்தனர். இதையடுத்து எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில் விளாத்திகுளம் இன்ஸ்பெக்டர் இளவரசு தலைமையில் எஸ்ஐ கங்கைநாத பாண்டியன், காவலர்கள் லிங்கராஜ், குருசாமி ஆகியோர் கொண்டு அமைக்கப்பட்ட தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதில் எட்டயபுரம் பகுதியில் தனியார் ஓட்டல் முன்பாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றுகொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் கார்த்திகேயனுக்கு அடுத்த வீட்டில் வசித்து வரும் சீனிவாசன் மகன் விவேக்ராஜா என்பதும், கார்த்திகேயன் வீட்டை பூட்டி சாவியை வைத்திருக்கும் இடத்தை தெரிந்து கொண்டு அச்சாவி மூலம் கதவை திறந்து வீடுபுகுந்து நகை, பணத்தை திருடிச்சென்றது அம்பலமானது. இதையடுத்து விவேக்ராஜாவை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 11 பவுன் நகைகளை மீட்டனர். இதையடுத்து தனிப்படை போலீசாரை எஸ்.பி. ஜெயக்குமார் பாராட்டி பரிசுகள் வழங்கினார்.
மேலும் செய்திகள்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜ நிர்வாகிகள் நியமனம்
பிள்ளையன்மனை பரமேறுதலின் ஆலயத்தில் அசன விழா
தூத்துக்குடியில் நாளை வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
தங்கம்மாள்புரம் கண்மாயில் மார்க்கண்டேயன் எம்எல்ஏ ஆய்வு
உடன்குடி யூனியனில் ரூ.93.22 லட்சத்தில் சாலை பணிகள்
மெஞ்ஞானபுரத்தில் பேவர்பிளாக் சாலை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!