குமரி மலையோர பகுதிகளில் சாரல் மழை
1/11/2022 4:51:15 AM
நாகர்கோவில், ஜன.11: குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பிற்பகல் முதல் திடீரென்று வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்து வந்தது. மாலையில் மலையோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்தது. நேற்று காலையும் ஒரு சில இடங்களில் மழை காணப்பட்டது. நேற்று காலை வரை அதிகபட்சமாக அடையாமடை பகுதியில் 13 மி.மீ மழை பெய்திருந்தது. மாம்பழத்துறையாறு 5 மி.மீட்டரும் மழை பெய்திருந்தது.நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 46.22 அடியாகும். அணைக்கு 225 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. பெருஞ்சாணி நீர்மட்டம் 61.20 அடியாகும். அணைக்கு 205 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. 750 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. சிற்றார்-1ல் 16.89 அடியாக நீர்மட்டம் உள்ளது. சிற்றார்-2ல் 16.99 அடியாக நீர்மட்டம் உள்ளது. பொய்கையில் 36.40 அடியாக நீர்மட்டம் உள்ளது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 43.64 அடியாகும்.
மேலும் செய்திகள்
குமரியில் பரவலாக பெய்த சாரல் மழை
ஓடும் பஸ்சில்பெண்ணிடம் செயின் அபேஸ்
கன்னியாகுமரியில் பைக் அரசு பஸ் மோதல் மாணவர் உள்பட 2 பேர் பலி: வாலிபர் படுகாயம்
குமரி கடலில் சூறைக்காற்று விசைப்படகுகள் கரை திரும்பின மீன்பிடி தொழில் பாதிப்பு
குமரி முழுவதும் சூறைக்காற்றுடன் மழை
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் 100 அடி உயர கம்பத்தில் பறக்கும் தேசிய கொடி பயணிகள் மகிழ்ச்சி
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!