தேசிய ஊரக பணியாளர்களை பள்ளிகளின் தூய்மை பணிக்கு பயன்படுத்த வேண்டும்: கலெக்டரிடம் கோரிக்கை
1/11/2022 2:37:41 AM
திருவள்ளூர்: பள்ளிகளின் தூய்மை பணிக்காக மாணவர்கள் நலன்கருதி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை சுழற்சி முறையில் தினமும் பயன்படுத்தினால் பள்ளி வளாகம் மேம்படும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் தலைமையில் கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது.
கொரோனா மற்றும் தொடர்மழை காரணமாக அனைத்துவகை அரசு பள்ளிகளில் தூய்மைப்படுத்த சிரமங்கள் உள்ளன. பல பள்ளிகளில் தூய்மை பணியாளர்கள் இல்லை. அதனால், பள்ளிகளின் தூய்மை பணிக்காகவும், மாணவர்கள் நலன்கருதி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை சுழற்சி முறையில் தினமும் பயன்படுத்தினால் பள்ளி வளாகம் மேம்படும். எனவே, மாவட்ட நிர்வாகம் பரிசீலனை செய்து உதவிட வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. அவருடன் சங்க நிர்வாகிகள் வே.ரேவதி, எஸ்.கந்தசாமி, எம்.ஜான்சன், வி.எம்.சுகுணா உள்பட பலர் இருந்தனர்.
மேலும் செய்திகள்
திருவள்ளூர் அருகே அம்மன் கோயில்களை உடைத்து 24 சவரன், ரூ5 லட்சம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
பள்ளிப்பட்டு அருகே பெயரளவில் நடைபெறும் கழிவுநீர் கால்வாய் பணி: பொதுமக்கள் குற்றச்சாட்டு
கும்மிடிப்பூண்டியில் திமுக செயற்குழு கூட்டம்: எம்எல்ஏ பங்கேற்பு
திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை நிகழ்ச்சி: திருச்சி சிவா எம்பி பங்கேற்பு
இலவச வீட்டுமனை விவகாரத்தில் பெண் வட்டாட்சியரை சிறைபிடித்து மக்கள் மறியல்
பெரியபாளையம் அருகே ஸ்ரீசாய்பாபா கோயிலில் வருடாபிஷேக விழா
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!