இன்று முழு ஊரடங்கு அமல் நாமக்கல் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல்
1/9/2022 4:15:50 AM
நாமக்கல், ஜன.9: தமிழகத்தில் இன்று முழு நேர ஊரடங்கு அமலாவதால், நாமக்கல் நகரில் நேற்று மாலை முதலே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நாமக்கல் நகரின் முக்கிய சாலையான சேலம் சாலை, பரமத்தி சாலை, திருச்சி சாலை, கடைவீதி உள்ளிட்ட அனைத்து சாலைகளிலும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்தது. மளிகை கடைகள், பேக்கரி கடைகள், காய்கறி கடைளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர். மீன், கோழி உள்ளிட்ட இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகரித்தது. இரவு நேரம் நெருங்க நெருங்க நகரில் உள்ள சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாக வாகனங்கள் சென்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகமானது. வெளியூர்களில் இருந்து நாமக்கல் வந்தவர்கள், இங்குள்ள கோழிப்பண்ணைகள், லாரிப்பட்டறைகள், தொழிற்சாலைகள், கடைகளில் பணியாற்றுபவர்கள் வெளியூர் செல்ல பேருந்து நிலையத்தில் குவிந்தனர். இதனால் பஸ்களில் நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த, போக்குவரத்து போலீசார், வாகனங்களை ஒழுங்குபடுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் நாமக்கல் நகரில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும் செய்திகள்
மாவட்டத்தில் பரவலாக மழை
விவேகானந்தா மகளிர் கல்லூரிகளில் ஆண்டுவிழா
தென்னை விவசாயிகளுக்கு மானியம்
1,107 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை
சிதிலமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
வேளாண் அறிவியல் நிலையத்தில் உழவர் திருவிழா, கண்காட்சி
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!