வணிகர்கள் சங்க நிர்வாகிகளுடன் நகராட்சி ஆணையர் ஆலோசனை
1/9/2022 4:15:24 AM
திருச்செங்கோடு, ஜன.9: திருச்செங்கோடு நகராட்சி அலுவலகத்தில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அனைத்து வணிகர்கள் சங்க நிர்வாகிகளுடன், நகராட்சி ஆணையாளர் கணேசன் நேற்று ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் கொரோனா, ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த அனைத்து வியாபாரிகள், வணிகர்கள், பொதுமக்கள் அனைவரும், அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றாத கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் பூட்டி சீல் வைக்கப்படும் என ஆணையாளர் கணேசன் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் காவல் துறையினர், வியாபாரிகள், சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகள்
மாவட்டம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு
ஆவத்திபாளையம் அரசு பள்ளியில் ஆங்கில வழி கல்வி கேட்டு பெற்றோர்கள் தர்ணா
களங்காணி கிராமத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இளம் கதை சொல்லி விருது
வளர்ச்சி திட்டப்பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்க வேண்டும்
போதமலைக்கு சாலை அமைக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதி
திருச்செங்கோடு கூட்டுறவு சங்கத்தில் ₹17.5 லட்சத்திற்கு பருத்தி, எள் ஏலம்
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!