கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள விளை நிலத்தில் 2 மலை பாம்புகள் மீட்பு
1/9/2022 12:18:40 AM
சின்னசேலம், ஜன. 9: கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே எடுத்தவாய்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர், கல்வராயன்மலை அடிவார பகுதியில் உள்ள விளை நிலத்தில் மரவள்ளி கிழங்கு பயிரிட்டுள்ளார். இந்நிலையில் சுப்பிரமணி மரவள்ளி பயிரிட்டுள்ள வயலை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் சென்றுள்ளார். அப்போது வயலில் 2 மலைப்பாம்புகள் ஊர்ந்து சென்றதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கள்ளக்குறிச்சி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார்.
கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் கண்ணன் தலைமையில் வீரபாண்டியன், நாகேஸ்வரன், கழகமணி உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சுமார் 7 அடி நீளமுள்ள 2 மலை பாம்புகளையும் பிடித்து கச்சிராயபாளையம் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் கோவிந்தராசு, சின்னதுரை உள்ளிட்டோர் அவைகளை எடுத்து சென்று பரிகம் வனப்பகுதியில் உள்ள காப்புக்காட்டில் விட்டனர். விளை நிலத்தில் மலைப்பாம்புகள் இருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகள்
ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை
ஆசிரியை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 7 பவுன் நகை பறிப்பு
கிருஷ்ணா பேக்கரி, ஸ்வீட்ஸ் கடை திறப்பு
விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்
திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் இல்லத் திருமண விழா
கடலூர், கம்மாபுரம் ஒன்றியங்கள் ஆறு பகுதிகளாக பிரிப்பு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்