முழு ஊரடங்கை முன்னிட்டு உழவர்சந்தை. மார்க்கெட் பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது
1/9/2022 12:17:26 AM
கரூர், ஜன.9: பொது ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமை செயல்பட இருப்பதால் நேற்று சனிக்கிழமை பொதுமக்கள் உழவர் சந்தை மற்றும் காமராஜர் மார்க்கெட் பொருட்களை வாங்க மக்கள் திரண்டனர்.தமிழக அரசு கொ ேரானா பரவல் கட்டுப்படுத்துவதற்காக 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பொது ஊரடங்கு ஆக அறிவித்தது. இதனால் நேற்று சனிக்கிழமை கரூர் உழவர் சந்தை ,கரூர் காமராஜர் தினசரி மார்க்கெட் கரூர் பஸ் நிலையம் அருகில் உள்ள மார்க்கெட் ஆகிய பகுதிகளில் மக்கள் காய்கறி கீரை வகைகள் மற்றும் பஸ் நிலையம் அருகில் உள்ள மளிகை கடைகளில் தங்கள் வீடுகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க திரண்டனர்.மேலும் நேற்று கரூர் உழவர் சந்தை பகுதியில் நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டு கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு உழவர் சந்தையில் கடை வைத்துள்ள உழவர்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கினார். இருப்பினும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் நேற்று அதிகமான பொதுமக்கள் உழவர் சந்தைக்கு காய்கறி வாங்க குவிந்தனர்.கரூர் காமராஜர் மார்க்கெட்டில் கடல் மீன்கள் குளத்து மீன்கள் மற்றும் வளர்ப்பு மீன்கள் பெருமளவில் கடைகளில் விற்பனை செய்யப்படும் தான் அந்த மீன்களை வாங்குவதற்கும் மார்க்கெட்டில் அமைந்துள்ள இறைச்சி கடைகளில் ஆட்டு இறைச்சி மற்றும் கோழி, வாங்க பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர்.பொதுமக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்க வழி போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டனர். நகராட்சி நிர்வாகம் சார்பில் முகக் கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் செய்திகள்
சீருடை பணியாளர் தேர்வாணைய சார்பு ஆய்வாளர் பணிக்கு எழுத்து தேர்வு
தினமும் மாலையில் தோகைமலையில் ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சுத்திறன் : வளர்த்தல் குறித்த பயிற்சி
கரூரில் முதன்முறையாக துவக்கம்; கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்
நகராட்சியை பசுமையாக மாற்ற புகளூர் பெண்கள் பள்ளியில் மாணவிகள் விழிப்புணர்வு உறுதிமொழி
கரூர் தபால் தந்தி அலுவலகம் முன் அக்னிபாத் திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
2 வார விடுமுறைக்கு பிறகு கரூர் மாவட்டத்தில் 1041 பள்ளிகள் திறப்பு
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!