போலீசார் விழிப்புணர்வு கொரோனா 3வது அலையை தடுக்க முகக்கவசம் அணியாமல் வெளியே வராதீர்கள்
1/8/2022 7:33:25 AM
ேவலூர், ஜன.8: கொரோனா 3-வது அலையை தடுக்க முகக்கவசம் அணியாமல் வெளியே வராதீர்கள் என்று பாகாயம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. வலூர் மாவட்டத்திலும் தொற்று எண்ணிக்ைக அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் வீட்ைடவிட்டு வெளியே வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என மாவட்ட நிர்வாகம் ேகட்டுக்கொண்டுள்ளது. இந்நிலையில் பாகாயம் இன்ஸ்பெக்டர் சுபா தலைமையிலான போலீசார், பாகாயம் ஜங்ஷன் பகுதியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது அவ்வழியாக முகக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி இலவசமாக முகக்கவசம் வழங்கினர்.
பின்னர் பாகாயம் இன்ஸ்பெக்டர் சுபா ேபசுகையில், ‘‘கொரோனா 3-வது அலை வேகமாக பரவுவதால் மக்கள் வெளியே வரும்ேபாது முன்னெச்சரிக்ைகயுடன் இருக்க வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளி கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். முகக்கவசம் இன்றி வெளியே வரக்கூடாது. அடிக்கடி சோப்பு பயன்படுத்தி ைககளை கழுவ ேவண்டும். இதன்மூலம் 3வது அலையை தவிர்க்கலாம். நேற்றுமுன்தினம் மட்டும் மாநிலத்தில் 2,179 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். அனைவரும் 2 தவணை தடுப்பூசி ேபாட்டிருக்க வேண்டும். 15 முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ெபற்றோர்கள் அறிவுறுத்த வேண்டும். இவற்றின் மூலம் கொரோனாவின் வேகத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியும்’’ என்று அறிவுறுத்தினார்.
மேலும் செய்திகள்
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்
ேவலூர் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு ஒருநாள் புத்தாக்க பயிற்சி எம்எல்ஏ, மேயர் பங்கேற்பு
திருவலம் பேரூராட்சியில் பணி நியமனம், வரிமேல் முறையீட்டுக் குழு உறுப்பினர் திமுகவினர் போட்டியின்றி தேர்வு
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் வாரிசுகள் நிவாரணத்திற்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
கூட்டுறவு வங்கி பேரவைக்கூட்டம் குடியாத்தத்தில்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் பேரணாம்பட்டு ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளியில்
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!