ஊராட்சி அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை அணைக்கட்டு அருகே பரபரப்பு
1/8/2022 7:30:37 AM
அணைக்கட்டு, ஜன.8: அணைக்கட்டு தாலுகா வேலூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊசூர் அடுத்த புலிமேடு ஊராட்சியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் எனும் நூறு நோள் வேலைவாய்ப்பு திட்டத்தில் கால்வாய்கள் தூர்வாருதல், குளங்கள் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. அதிகபட்சமாக 900 தொழிலாளர்கள் உள்ள ஊராட்சியில் தொழிலாளர்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கபட்டு வேலை வழங்கபட்டு வருகிறது. முதல் குழுவுக்கு ஒருவாரமும், இரண்டாம் குழுவுக்கு அடுத்த வாரங்களிலும் வேலை வழங்கபட்டு வந்தது. இந்நிலையில் கடந்த வாரத்தோடு முதல் குழுவுக்கு வேலை முடிந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் இரண்டாவது குழுவுக்கு வேலை வழங்க கோரி புலிமேடு ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தொடர்ந்து ஊராட்சியில் முதல் குழுவில் தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாக வேலை வழங்கியதுபோல் இரண்டாவது குழுவை சேர்ந்த எங்களுக்கும் தொடர்ச்சியாக வேலை வழங்க வேண்டும் என ஊராட்சி மன்ற அலுவலர்களிடம் புகார் தெரிவித்தனர். தகவலறிந்த ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமிமுரளிதரன், துணை தலைவர் முருகன், ஊராட்சி செயலாளர் சலாவுதின் மற்றும் வார்டு உறுப்பினர்கள் வந்து தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் புதியதாக வேலைகள் தொடங்குவதற்கான திட்டமதிப்பீடு தயார் செய்து அனுமதிபெற்று அடுத்த வாரம் முதல் தொடர்ச்சியாக வேலை வழங்க நடவடிக்க எடுக்கபடும் என உறுதியளித்தனர். இதையடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். காலை 9 மணிக்கு தொடங்கி 11 மணி வரை இரண்டு மணி நேரம் நடந்த இந்த முற்றுகை போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகள்
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்
ேவலூர் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு ஒருநாள் புத்தாக்க பயிற்சி எம்எல்ஏ, மேயர் பங்கேற்பு
திருவலம் பேரூராட்சியில் பணி நியமனம், வரிமேல் முறையீட்டுக் குழு உறுப்பினர் திமுகவினர் போட்டியின்றி தேர்வு
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் வாரிசுகள் நிவாரணத்திற்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
கூட்டுறவு வங்கி பேரவைக்கூட்டம் குடியாத்தத்தில்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் பேரணாம்பட்டு ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளியில்
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!