அரவக்குறிச்சி அருகே வாலிபர் தற்கொலை
1/8/2022 12:41:42 AM
அரவக்குறிச்சி, ஜன. 8: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை ஒன்றியம் பாடியூரை சேர்ந்தவர் கார்த்திக்குமார்(39). இவருக்கு இன்னும் திருமணம் ஆகாததாலும், சரியான தொழில் அமையாததாலும் விரக்தியில் இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் கரூர் மாவட்ட எல்லைப் பகுதியான ரங்கமலை கணவாய் காட்டுப்பகுதியில் மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.இவர் தற்கொலை செய்து கொண்ட விவரம் தெரியாத நிலையில், நேற்றுமுன்தினம் அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் தூக்கில் கார்த்திக்குமார் தொங்குவதை பார்த்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அரவக்குறிச்சி காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
சீருடை பணியாளர் தேர்வாணைய சார்பு ஆய்வாளர் பணிக்கு எழுத்து தேர்வு
தினமும் மாலையில் தோகைமலையில் ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சுத்திறன் : வளர்த்தல் குறித்த பயிற்சி
கரூரில் முதன்முறையாக துவக்கம்; கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்
நகராட்சியை பசுமையாக மாற்ற புகளூர் பெண்கள் பள்ளியில் மாணவிகள் விழிப்புணர்வு உறுதிமொழி
கரூர் தபால் தந்தி அலுவலகம் முன் அக்னிபாத் திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
2 வார விடுமுறைக்கு பிறகு கரூர் மாவட்டத்தில் 1041 பள்ளிகள் திறப்பு
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!