கொரோனா பரவல் தடுக்க நடவடிக்கை கரூரில் கட்டுப்பாடுகள் மீண்டும் அமல் வழிபாட்டு தலங்கள் மூடல்: வெறிச்சோடிய சாலைகள்
1/8/2022 12:41:20 AM
கரூர், ஜன. 8: தமிழக அரசு கடந்த 6ம்தேதி கொரோனா கட்டுப்படுத்த மீண்டும் இரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பொது ஊரடங்கு அறிவித்தது. அரசின் அறிவிப்பை செயல்படுத்துவதில் கரூர் மாவட்ட காவல் துறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் உத்தரவின் பேரில் தனித்தனி குழுக்களாக பிரிக்கப்பட்டு பகுதியில் ஐந்து குழுக்களாகப் பிரித்து தனித் தனி போலீஸ் ஆய்வாளர்கள் பணிக்கு அமைத்து கொ ேரானா கட்டுப்படுத்த அரசின் செயல் முறைகளை மக்கள் கடைப்பிடிக்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் கரூர் டவுன் பகுதியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு முகக் கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதமும் முதல் முறை என்றால் எச்சரித்தும் இனி வெளியில் வரும்பொழுது கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.மேலும் கரூர் ஜவார் பஜார் கோவை ரோடு சர்ச் கார்னர் வெங்கமேடு பாலம் அமரராகி பாலம் ஆகிய பகுதிகளில் போலீசார் தனியாக குழு அமைத்து சிறப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து இரவு நேரமும் பரபரப்பாக காணப்படும் கரூர் நகரம் வெறிச்சோடி காணப்பட்டது. கரூர் ஜவுளி ஏற்றுமதி செய்யும் முக்கிய நகரமாகும் எனவே இரவு நேரங்களில் டெக்ஸ்டைல் துறையில் பணிபுரியும் ஆண்கள் மற்றும் பெண்கள் ஏராளமானோர் இரவு நேர பணியை முடித்துக்கொண்டு காலை 6 மணி வரை எப்போதும் கரூர் ஜவஹர் பஜார் கோவை ரோடு செங்குந்தபுரம் காமராஜர்புரம் ராமகிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகள் மக்கள் நடமாட்டம் ஆக இருக்கும் ஆனால் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஊரடங்கு என்பதால் கரூர் நகரம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் நேற்று முதல் நாளை வரை வழிபாட்டு தலங்களையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளதால் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன. பக்தர்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும் செய்திகள்
சீருடை பணியாளர் தேர்வாணைய சார்பு ஆய்வாளர் பணிக்கு எழுத்து தேர்வு
தினமும் மாலையில் தோகைமலையில் ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சுத்திறன் : வளர்த்தல் குறித்த பயிற்சி
கரூரில் முதன்முறையாக துவக்கம்; கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்
நகராட்சியை பசுமையாக மாற்ற புகளூர் பெண்கள் பள்ளியில் மாணவிகள் விழிப்புணர்வு உறுதிமொழி
கரூர் தபால் தந்தி அலுவலகம் முன் அக்னிபாத் திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
2 வார விடுமுறைக்கு பிறகு கரூர் மாவட்டத்தில் 1041 பள்ளிகள் திறப்பு
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!