பரிசலில் சென்று மீன் பிடிக்கும் தம்பதி சுங்க சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிக்காமல் மெத்தனம்
1/7/2022 12:33:31 AM
கரூர், ஜன. 7: தொடர்ந்து பலமுறை வலியுறுத்தியும், கரூர் மாவட்டத்தில் சுங்கச் சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைகள் முறையாக பராமரிக்கப்படாததது குறித்து உரிய விளக்கம் கேட்டு மாவட்ட கலெக்டர், தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்ட மேலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கரூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மணவாசி பகுதியில் ஒரு சுங்கச்சாவடியும், திண்டுக்கல் கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலன் செட்டியூர் பகுதியில் ஒரு சுங்கச்சாவடியும் அமைந்துள்ளது. இந்த சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அந்த பகுதியில் உள்ள சாலைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை.
இதனால், அந்த பகுதிகளில் அதிக அளவிலான விபத்துக்கள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இது குறித்து மாவட்ட அளவில் நடைபெறும் சாலை பாதுகாப்பு குழுவின் பல கூட்டங்களில் குழுவின் தலைவரும், மாவட்ட கலெக்டருமான பிரபு சங்கர், சுங்கச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் சாலை விபத்துக்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் சாலைகளை முறையாக பராமரிக்க வேண்டும். உயர் கோபுர மின் விளக்குகள் அமைத்தல், வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை பதாதைகள் வைத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தி வந்தார்.
ஆனால், அனுமதி பெற்ற சாலைகளில் கட்டணம் வசூலித்து வரும் நிறுவனங்கள் இதுநாள் வரை சாலைகளை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து விளக்கத்தினை 10 நாட்களுக்குள் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட மேலாளருக்கு மாவட்ட கலெக்டர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும், 10 நாட்களுக்குள் பதில் அளிக்க தவறினால் சட்ட விதிகளுக்கு உட்பட்டு சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் வசூலிப்பதை நிறுத்தவும், சுங்கச் சாவடியை ரத்து செய்யவும் ஒன்றிய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்துக்கு பரிந்துரைக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
சீருடை பணியாளர் தேர்வாணைய சார்பு ஆய்வாளர் பணிக்கு எழுத்து தேர்வு
தினமும் மாலையில் தோகைமலையில் ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சுத்திறன் : வளர்த்தல் குறித்த பயிற்சி
கரூரில் முதன்முறையாக துவக்கம்; கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்
நகராட்சியை பசுமையாக மாற்ற புகளூர் பெண்கள் பள்ளியில் மாணவிகள் விழிப்புணர்வு உறுதிமொழி
கரூர் தபால் தந்தி அலுவலகம் முன் அக்னிபாத் திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
2 வார விடுமுறைக்கு பிறகு கரூர் மாவட்டத்தில் 1041 பள்ளிகள் திறப்பு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்