குண்டாசில் 3 பேர் கைது
1/6/2022 6:28:13 AM
திருச்சி, ஜன.6: திருச்சி மாநகரில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றசம்பவங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், வாகன தணிக்கை செய்து சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் போலீசாருக்கு அறிவுரை வழங்கி உள்ளார். கடந்த டிச.17ம் தேதி திருச்சி காவிரி நகரில் நடந்து சென்ற ஒருவரை வழிமறித்து கத்தியை காட்டி பணத்தை பறித்ததாக தங்கமுத்து(27) என்பவரை எ.புதூர் போலீசார் கைது செய்தனர். கடந்த டிச.5ம் தேதி பாரதிதாசன் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் செல்போன் பறித்ததாக ஷேக்தாவுத்(33), மன்சூர்அலி(28) ஆகியோரை கன்டோன்மென்ட் போலீசார் கைது செய்தனர். சிறையில் உள்ள இந்த மூவர் மீதும் பல்ேவறு வழக்குகள் நிலுவையில் இருந்தததை அடுத்து, இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய திருச்சி மாநகர கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதன் பேரில் மூவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
மேலும் செய்திகள்
மேகதாதுவில் அணை கட்ட அனுமதித்தால் தமிழகம் வரும்போது பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் எச்சரிக்கை: திருச்சி அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் படம் அகற்றம், கிழிப்பு
வங்கியில் பணம் எடுத்து செல்வோரிடம் வழிப்பறி: வாலிபர் கைது: ரூ.4.80 லட்சம் மீட்பு
திருச்சியில் செல்போன், ரொக்க பணம் முகமுடி நபர்கள் வழிப்பறி
சிறுகமணியில் வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பூச்சி, நோய் மேலாண்மை பயிற்சி
திருச்சி பஞ்சப்பூர் ஜங்ஷனில் புதிதாக திறக்கப்பட்ட காவல் சோதனை சாவடியால் குற்ற சம்பவங்கள் குறைந்தது
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!