முக கவசம் அணியாமல் சென்றால் நடவடிக்கை
1/6/2022 12:17:33 AM
கடலூர், ஜன. 6: தமிழகத்தில் தற்போது உருமாறிய ஒமிக்ரான் நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் தமிழக அரசு தற்போது மீண்டும் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக போலீசார் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கடலூர் டிஎஸ்பி கரிகால் பாரி சங்கர் கலந்து கொண்டு, கொரோனா பரவலை தடுக்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதன் ஒரு பகுதியாக கடலூரில் பிரதான சாலைகளில் சென்ற ஏராளமான பொது மக்கள் முக கவசம் அணியாமல் சென்றதை தொடர்ந்து, முகக்கவசம் அணியாமல் சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை நிறுத்தி அனைவருக்கும் முகக்கவசம் இலவசமாக வழங்கி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். வருங்காலங்களில் அரசு விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்து அனுப்பினார். மேலும் வணிகர்கள் மற்றும் வியாபாரிகள், தங்கள் கடைகளுக்கு வரக்கூடிய பொது மக்களுக்கு கையில் கிருமி நாசினி தெளித்து, முகக் கவசம் இல்லாமல் வரக்கூடிய பொதுமக்களுக்கு உரிய முறையில் முக கவசம் வழங்கி சமூக இடைவெளியுடன் இருக்க அறிவுறுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் கணபதி, ஐயனார் மற்றும் போக்குவரத்து போலீசார் உடன் இருந்தனர்.
மேலும் செய்திகள்
ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை
ஆசிரியை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 7 பவுன் நகை பறிப்பு
கிருஷ்ணா பேக்கரி, ஸ்வீட்ஸ் கடை திறப்பு
விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்
திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் இல்லத் திருமண விழா
கடலூர், கம்மாபுரம் ஒன்றியங்கள் ஆறு பகுதிகளாக பிரிப்பு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்