ஆயுதப்படை வளாகத்தில் நூலகம், காவலர் குழந்தைகள் காப்பகம்
1/5/2022 6:25:00 AM
பெரம்பலூர்,ஜன.5: பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நூலகம் மற்றும் காவலர் குழந்தைகள் காப்பகத்தை எஸ்பி மணி திறந்து வைத்தார். பெரம்பலூர் அருகே தண்ணீர் பந்தல் பகுதியில் மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டில் ஆயுதப்படை வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் வசித்து வரும் காவலர்களின் குழந்தைகள், காவலர்களின் பணியின் போது வீட்டில் தனிமையாக இருப்பதை உணர்ந்த பெரம்பலூர் மாவட்ட எஸ்பி மணி, காவலர்களின் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் ஆயுதப்படை வளாகத்தில் காவலர் குழந்தைகள் காப்பகத்தை துவங்கி வைத்து குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார். அப்போது பேசிய எஸ்பி மணி, ஒரு புத்தகம் தான் சிறந்த மனிதனை உருவாக்கும். அனைவரும் பணிகள் இல்லாத நேரங்களில் நூலகத்திற்கு வந்தும், நூலகத்தில் உறுப்பினராகி நூல்களை வாங்கி சென்றும் பொது அறிவை வளர்த்து கொள்ள வேண்டும்.
உலக விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறி ஆயுதப்படை வளாகத்தில் காவலர்களின் அறிவு பசிக்கு விருந்தளிக்கும் வகையில், பல்வேறு வகையான நாவல்கள், தொடர் கதைகள், பொது அறிவு புத்தகங்கள் என நுற்றுக் கணக்கான பத்தகங்களை ஒன்றிணைத்து காவலர்களுக்கான நூலகத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது பெரம்பலூர் ஆயுதப்படை டிஎஸ்பி சுப்பாராமன், இன்ஸ்பெக்டர் அசோகன், சப்.இன்ஸ்பெக்டர் கள், ஏட்டுகள், போலீசார், அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் காவலர் குழந்தைகள் என பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
நெல்அறுவடை முடிவடையும் வ ரை நெல் கொள்முதல் நி லையங்களை திறந்து வை த்து கொள்முதல் செய்ய வேண்டும்: விவசாயிகள் சங் கம் வேண்டுகோள்
அரியலூரில் இன்று நடக்கிறது திமுக 15வது ஒன்றிய தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்
ெபரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் விதை தரத்தை அறிந்து விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய வேண்டும்: வேளாண்மை அலுவலர் வேண்டுகோள்
தா.பழூர் மகா முத்துமாரியம்மன் கோயில் திருவிழா
குண்டும், குழியுமான சாலை கரூரில் முதன்முறையாக துவக்கம்: கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்; அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்
மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!