தா.பேட்டை பகுதியில் இருவேறு சாலை விபத்து: 2 பேர் பலி
1/3/2022 4:39:04 AM
தா.பேட்டை, ஜன.3: தா.பேட்டை பகுதியில் நடந்த இருவேறு சாலை விபத்தில் 2 பேர் பலியாயினர். மண்ணச்சநல்லூர் தாலுகா ராசாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினகுமார்(42), லாரி டிரைவரான இவர் நாமக்கல் செல்வதற்காக பைக்கில் தா.பேட்டை வழியாக சென்றுள்ளார். ஊரகரை அருகே அண்ணாமலை நகரில் எதிரே வந்த பைக் மீது எதிர்பாராதவிதமாக ரத்தினகுமார் மோதி தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த ரத்தினகுமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தா.பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வழக்குப்பதிந்து ரத்தினகுமார் உடலை பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
இதே போன்று தா.பேட்டை அருகே ஊரக்கரை கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் பிரசாந்த்(18), லாரி கிளீனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிரசாந்த் தா.பேட்டை சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக பைக்கில் ஊரக்கரை நோக்கி சென்றுள்ளார். அப்போது நாமக்கல்லில் இருந்து துறையூர் நோக்கி வந்த அரசு பஸ் பைக் மீது மோதியது. இதில் பிரசாந்த் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து தா.பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து பிரசாந்த் உடலை பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அரசு பஸ் டிரைவர் ரெங்கசாமியை கைது செய்து விசாரணை மேற் கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
திருச்சியில் எல்ஐசி முகவர்கள் தொடர் போராட்டம்
நுகர்பொருள் வாணிபக்கழக தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
கூட்டுறவு சிக்கன கடன் சங்க பேரவைக்கூட்டம் வரும் 9 ம்தேதி நடக்கிறது
வாழை கன்றுகளை கையில் ஏந்தி போராட்டம்: கலெக்டரிடம் கோரிக்கை
விவசாயிகள் குறைதீர் கூட்டம்; திருச்சி மாவட்டத்தில் யூரியா மற்றும் உரம் தட்டுபாடில்லாமல் வழங்க வேண்டும்
மாநகரின் 65 வார்டுகளுக்கும் புதிய சாலை மேம்பாட்டு திட்ட பணிகளுக்கு ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!