திருவாரூரில் மாநில அளவிலான மகளிர் செஸ் சாம்பியன் ஷிப் போட்டி
1/3/2022 4:37:15 AM
திருவாரூர், ஜன. 3: திருவாரூரில் நடைபெறும் மாநில அளவிலான மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளை எம்எல்ஏ பூண்டி கலைவாணன் துவக்கி வைத்தார். திருவாரூர் மாவட்ட சதுரங்க கழகத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு 50 வது தமிழ்நாடு மாநில மகளிர் செஸ் சாம்பியன் ஷிப் போட்டிகள் நேற்று முதல் வரும் 6ம் தேதி வரை 9 சுற்றுகளாக திருவாரூரில் நடைபெறுகிறது.இதில் சென்னை, மதுரை, கோவை, நாகர்கோயில், திருவாரூர் உள்ளிட்ட 24 மாவட்டங் களைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்று விளையாடுகின்றனர். இப்போட்டிகளில் முதல் நான்கு இடங்களை பெரும் வீரர்கள் தேசிய அளவிலான போட்டிக்கு தமிழகத்தின் சார்பில் தேர்வு செய்து அனுப் பப்பட உள்ளனர்.இந்த நிலையில் கனகராஜன் தலைமையில் திருவாரூரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பா ளராக எம்எல்ஏ பூண்டி கலைவாணன் கலந்து கொண்டு 50வது தமிழ்நாடு மாநில மகளிர் செஸ் சாம்பியன் ஷிப் போட்டி களை துவக்கி வைத்தார். நகர திமுக செயலாளர் வாரை பிரகாஷ், மாவட்ட சதுரங்க கழகத் தலைவர் சாந்தகுமார், இணை செயலர்கள் வாழ்த்தி பேசினர். முன்னதாக தமிழ்நாடு சதுரங்ககழகம் இணைச் செயலாளர் பால குணசேகரன் வரவேற்றார். திருவாரூர் வட்ட சதுரங்க கழக செயலாளர் அசோகன் நன்றி கூறினார்.
மேலும் செய்திகள்
ஜெராக்ஸ்மிஷினை பழுதுநீக்கி தராத நிறுவனத்திற்கு ரூ.3லட்சம் அபராதம்: திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
ஒன்றிய அரசை கண்டித்து பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஊராட்சி செயலர்களுக்கு சம்பளம் வழங்ககோரி ஊரக வளர்ச்சிதுறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மழைநீர் வடிகால் அமைக்கும் பணி கல்வி நிறுவனங்கள் அரசின் கொரோனா தடுப்பு முறையை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்
பள்ளி, பாலிடெக்னிக், கல்லூரியில் படிக்கும் பிசி, எம்பிசி மாணவ, மாணவிகள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்
திருவாரூர் புதிய பேருந்து நிலைய டூ வீலர்கள் ஸ்டாண்டில் இட நெருக்கடி
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;