பழங்குடியின கிராமங்களில் குறைதீர் முகாம்
1/3/2022 1:57:52 AM
ஊட்டி, ஜன. 3: தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் கேரளா, கர்நாடகா மாநில எல்லையில் அமைந்துள்ளது. கேரள எல்லையோர வனப்பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருந்து வருகிறது. நீலகிரிக்குள் மாவோயிஸ்ட்கள் நுழையாதபடி தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எல்லையோர பழங்குடியின கிராமங்களில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் குறைதீர் முகாம்கள் நடத்தப்பட்டு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகின்றன. இதன் ஒருபகுதியாக மஞ்சூர் அருகே பெள்ளத்திகம்பை, தும்பனேரிகொம்பை, கொலக்கொம்பை அருகே சடையன்கொம்பை, மேல்குரங்குமேடு, கீழ்குரங்குமேடு ஆகிய கிராமங்களில் குறைதீர் முகாம் நடந்தது.
மேலும் கோத்தகிரி அருகே செம்மனாரை, தாளமொக்கை, மசினகுடி அருகே ஆனைபாடி, தேவர்சோலை அருகே கர்காபாளி, முக்கூர், ஆலவயல், வேர்கடவு, நெலாக்கோட்ைட அருகே போர்டுகாலனி, குழிமூலா மற்றும் விளங்கூர் ஆகிய கிராமங்களிலும் முகாம் நடந்தது. இதில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் பங்கேற்று பழங்குடியின மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. மொத்தம் 135 மனுக்கள் பெறப்பட்டன.
மேலும் செய்திகள்
பேப்பர் கப்புகளை பயன்படுத்திய தனியார் ஓட்டலுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் 21ம் தேதி ஊட்டியில் நடக்கிறது
அஞ்சலக வாடிக்கையாளர் குறை தீர்க்கும் கூட்டம் கோவையில் 28ம் தேதி நடக்கிறது
கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற குந்தை சீமை பார்பத்திக்கு பாராட்டு விழா
அச்சத்தை போக்கும் வகையில் அரசு பள்ளியில் 1ம் வகுப்பில் சேரும் புதிய மாணவர்களுக்கு நூதன வரவேற்பு
காந்தல் சாலையில் நிழற்குடை அமைக்க வலியுறுத்தல்
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!