மருந்துக்கடை உரிமையாளர் பள்ளத்தில் விழுந்து பலி
1/3/2022 1:36:33 AM
பவானி, ஜன. 3: பவானி அருகேயுள்ள மயிலம்பாடி, கொண்டுரெட்டிபாளையம், அம்மன் கோயில் தோட்டத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் பூபதி (36). இவர், மயிலம்பாடி பஸ் நிறுத்தம் அருகே மருந்துக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி, இரு மகள்கள் உள்ளனர். ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு அதிகளவில் மது அருந்திய பூபதி, குடிபோதையில் பைக்கில் சென்றவர் கொண்டுரெட்டிபாளையம் அருகே பள்ளத்தில் விழுந்தார். இதனை அவ்வழியே சென்றவர்கள் பார்த்து, அவரது வீட்டுக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த உறவினர்கள் பூபதியை மீட்டு, வீட்டுக்கு அழைத்து வந்தனர். அங்கே மயங்கிய நிலையில் காணப்பட்டதால் பவானி அரசு மருத்துவமனை கொண்டு வந்தனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது பூபதி ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. பவானி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
சட்டவிரோதமாக வெடிபொருட்கள் பதுக்கினால் தகவல் தெரிவிக்கலாம் ஈரோடு போலீசார் வலியுறுத்தல்
கொரோனா காரணமாக ரத்தான 1ம் தேதி முதல் ஓய்வூதியர் நேர்காணல் நடத்த முடிவு
கஞ்சா விற்ற 4 பேர் கைது
தீ குளித்து மூதாட்டி பலி
கோபி மொடச்சூரில்தாய் சேய் நலவிடுதி திறப்பு
குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!