தனியார் பள்ளி வாகனங்கள் நாளை தணிக்கை
1/3/2022 1:35:51 AM
ஈரோடு, ஜன. 3:ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவ-மாணவிகளை அழைத்து வரும் பஸ், வேன் போன்ற வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு இயக்கப்படுகிறதா? என்பதை ஆண்டுதோறும் ஆய்வு மேற்கொள்ளப்படும். அதன்படி, நடப்பாண்டு ஈரோடு கிழக்கு, மேற்கு, பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் தனியார் பள்ளிகளின் வாகனங்கள் நாளை(4ம் தேதி) தணிக்கை செய்யப்பட உள்ளது. இந்த வாகன தணிக்கையானது, ஈரோடு வேப்பம்பாளையத்தில் உள்ள ஏஇடி பள்ளி மைதானத்தில் நடக்கிறது.
இதில், ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்துக்கு உட்பட்ட பகுதியில் 83 தனியார் பள்ளி வாகனமும், மேற்கு பகுதியில் 300 பள்ளி வாகனமும், பெருந்துறை பகுதியில் 400 வாகனம் என மொத்தம் 783 தனியார் பள்ளி வாகனங்கள் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
இந்த தணிக்கை ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா முன்னிலையில் நடைபெற உள்ளது. இதில், வட்டார போக்குவரத்து அதிகாரிகளான ஈரோடு மேற்கு பிரதீபா, கிழக்கு பதுவைநாதன், பெருந்துறை சக்திவேல் ஆகியோர் தணிக்கை செய்வர் என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
சட்டவிரோதமாக வெடிபொருட்கள் பதுக்கினால் தகவல் தெரிவிக்கலாம் ஈரோடு போலீசார் வலியுறுத்தல்
கொரோனா காரணமாக ரத்தான 1ம் தேதி முதல் ஓய்வூதியர் நேர்காணல் நடத்த முடிவு
கஞ்சா விற்ற 4 பேர் கைது
தீ குளித்து மூதாட்டி பலி
கோபி மொடச்சூரில்தாய் சேய் நலவிடுதி திறப்பு
குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!