கோட்டூர் ஒன்றியத்தில் இல்லம் தேடிக் கல்வி விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
12/31/2021 12:41:16 AM
மன்னார்குடி, டிச. 31: கோட்டூர் ஒன்றியத்தில் உள்ள கண்டகிரயம் எக்கல், வாழ்வோடு, மேலமருதூர், தட்டான்கோவில் ஆகிய பகுதிகளில் நடந்த இல்லம் தேடிக் கல்வி விழிப்புணர்வு பிரசாரக் கலை நிகழ்ச்சிகள் மாணவர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. தமிழக அரசின் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் மூலம் பொது மக்கள் தன்னார்வலர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு பிரசாரக் கலை நிகழ்ச்சிகள் ஆங்காங்கே கலைக் குழுவினர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோட்டூர் ஒன்றியத்தில் கண்டகிரயம் எக்கல் அரசுத் தொடக்கப்பள்ளியில் ரெங்கநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலெட்சுமி குணசேகரன் தலைமையில் நேற்று கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஊராட்சி துணைத் தலைவர் சரவணன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவி முத்துலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்டகிரயம் எக்கல் அரசு தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியரும், இல்லம் தேடிக் கல்வித் திட்டத் தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான தங்க பாபு கலந்து கொண்டு திட்டத்தின் சிறப்பு அம்சங்களை எடுத்துரைத்து பேசி னார். இதில் தனலெட்சுமி தலைமையிலான கலைக் குழுவினர் தப்பாட்டம், ஒயிலா ட்டம் ,கரகாட்டம், நாடகம் மற்றும் பாடல்கள் மூலமாக பல்வேறு விழிப்புணர்வு கருத்துகளை மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே ஏற்படுத்தினர். கலைநிகழ்ச்சிகள் மாணவர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில் நூலகர் பிரேமா, ஏகாம்பரம், சந்திரா, சரண்யா அங்கன் வாடி பணியாளர்கள் சுகந்தி, வேல்விழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
ஜெராக்ஸ்மிஷினை பழுதுநீக்கி தராத நிறுவனத்திற்கு ரூ.3லட்சம் அபராதம்: திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
ஒன்றிய அரசை கண்டித்து பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஊராட்சி செயலர்களுக்கு சம்பளம் வழங்ககோரி ஊரக வளர்ச்சிதுறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மழைநீர் வடிகால் அமைக்கும் பணி கல்வி நிறுவனங்கள் அரசின் கொரோனா தடுப்பு முறையை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்
பள்ளி, பாலிடெக்னிக், கல்லூரியில் படிக்கும் பிசி, எம்பிசி மாணவ, மாணவிகள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்
திருவாரூர் புதிய பேருந்து நிலைய டூ வீலர்கள் ஸ்டாண்டில் இட நெருக்கடி
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!